May 15, 2013 //
0 Comments
அன்பினியவர்களே!!
உலகமெங்கும் உழைப்பாளிகள் நினைவுகூரப்பட்ட மேதினம் கடந்து போய்விட்டது. எல்லா தினங்களையும் போலவே தொழிலாளர்களின் தினமும் இன்னுமொரு விடுமுறை தினமாகக் கொண்டாடப்படுவதைத் தவிர்த்து உண்மையான உழைப்பாளிகளின் உணர்வை மற்றவர்கள் உணரும் அல்லது நினைவுகூரும் தினமாகக் கொண்டாடப்படுவதில்லை
அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் உழைப்பவர்களின் வியர்வை உலரும் முன்னரே அவர்களுக்கான கூலி வழங்கப்பட வேண்டு...
Continue reading
May 15, 2013 //
0 Comments
பட்சிகளின் அயர்ச்சிகளை
ஒன்றுக்கொன்று
சீண்டிக்களைத்த மேகங்கள்
தன்னிலை மாற்றி ஒழிகிறது
களைகூட்டி காடு செய்த
வானம்
முன்பொருபோதுமில்லாத
சிறகுகளிழந்து
வெறித்துக் கிடக்கின்றது
இரவைக் காத்து
புத்தகங்களுக்குள் மறைத்த
புகைப்படங்கள்
காட்டும் புன்னகையும்
பொருத்தமில்லாது
பொய்த்து விடுகையில்
விடுபட்ட சுவர்களுக்கிடையே
குடிகொண்ட்ட கரப்பான்களின்
ஒழுக்கமற்ற சத்தங்களின் விதைகள்
நிலமூர்கிறது
அங்கொ...
Continue reading
May 14, 2013 //
0 Comments
எனக்கு மிக நீண்ட நாட்களாக ஒரு ஆசை பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாட வேண்டுமென்று. சிறுவயதிலிருந்தே இதுவரை ஒருமுறை கூட பிறந்தநாளை அப்படி கொண்டாடியதே இல்லை. கல்லூரியில் என்னுடைய தோழிகெல்லாம் அப்படி கொண்டாடி இருக்கிறோம். அவளுக்கு நிறைய பரிசுப் பொருட்கள் கிடைக்கும். நிறைய வாழ்த்தட்டைகள் கூட வரும். ஆனால் நான் எல்லோருக்கும் நிறைய பரிசுப் பொருட்களை கொடுத்திருக்கிறேன். என்னுடைய நண்பர்களுக்கு நிறைய வாழ்த்...
Continue reading
May 14, 2013 //
0 Comments
உறுபசி
******
சலிப்படைந்த உணவை
வெறுத்து
தூங்கிப்போனான்
வைராக்கியத்தோடு
உறங்காமல் பசி விழித்திருக்க
நள்ளிரவில்
தூக்கம் களைந்து
புரண்டு புரண்டு படுத்தும்
பசி துரத்த
தாளாமல் எழுந்து
பழைய சோற்றை
ஆவேசத்துடன் புசிக்கும்போது
பழைய சோற்றுக்கு
கண்களெல்லாம் ஆனந்தக் கண்ணீர்
உதட்டோரங்களில்
கூர்வாளாய் மின்னும் கேலிப்புன்னகை
கற்பனையின் முகங்கள்:.
___________
வீட்டுக்குள் புகுந்த பாம்பு
...
Continue reading
May 14, 2013 //
0 Comments
வில்வித்தை பயிற்றுவிக்கும்
மைதானத்தில்
கோடைகால மதிய வேளையில்
இளைப்பாறிக்கொண்டிருந்தன
சாம்பல் நிறப் புறாக்கள்.
மழை சுமந்த காற்று
மென்தீண்டல் செய்தது
அன்றொரு நாள் போல் இன்று.
சூல்கொண்ட மேகம்
பெயக் கருணையற்று
சூழ்கின்றதென் நினைவில்.
பெயர்தெரியாக் குயிலொன்று
கேவி அழும் இப்பொழுதில்
இன்றும் நீ அருகில் இல்லை.
நனைந்து கசிந்து
ஞாபகங்கள் மேலெழ
யாருக்காகத்தான் பெய்கிறது இம்மழை
நமக்கன்ற...
Continue reading
May 14, 2013 //
0 Comments
இரக்கமற்றவை உனது காதுகள்.
தடுமாறி உன்னை வந்தடையும்
ஈர வார்த்தைகளின் விசும்பல்களை
மறுதலிப்பதே உனது காதுகள்.
தீராக்காயங்களுடன் தடம் மாறி
விந்தி உன்னருகே வருகின்ற
ஒடிந்த வார்த்தைகளை
பகடிப்புன்னகையுடன் கடந்துசெல்வதே
உனது காதுகள்.
வாழ்வின் மிகப்பெரும் தவறொன்றின்
மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாமல்
மெளனபாவனைக்குள் உன்னை
ஒளித்துக்கொள்வதே
உனது காதுகள்.
ஒவ்வொரு இரவிலும் அழுகின்ற
கண்கள் இரண்டின் பரி...
Continue reading
May 14, 2013 //
0 Comments
(பூரணி பொற்கலை- கண்மணி குணசேகரன்)
ஆத்திகக் கொள்கை கொண்ட மனிதர்களுக்கு கடவுள் நம்பிக்கையே கடைசித்துணையும், ஆறுதலுமாகும்.தன் எல்லா வலிகளையும், எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையோடு கடவுளிடம் இறக்கிவைத்து ஆசுவாசம் பெறுகிறார்கள். நல்ல பலன்கள் நடைமுறை வாழ்வில் நிகழும்போது, அந்தக் கடவுளே செய்ததாக நன்றிகூர்கிறார்கள்.கடவுளுக்குப் படையல், நேர்த்திக்கடன் ஆகியவை செலுத்தி மகிழ்கிறார்கள். ஏழை, எளிய, சிற்றூர் ...
Continue reading
May 14, 2013 //
2 Comments
"ஆயிர்ரூவா ஆனாலும் பரவால்லப்பா... என்னால நின்னுட்டு வர முடியாது "
கெஞ்சிக் கொண்டிருந்தவர் ரொம்ப வயதானவர் என்றெல்லாம் சொல்ல முடியாது, 40 வயதுக்கு கிட்ட இருக்கலாம். பின்னாடி மாட்டியிருந்த பை, உடை பாவனை கவனித்தால் குளிரூட்டப் பட்ட அறையிலே வேலையாய் இருந்திருப்பார் போல.
எனக்கும் சென்னை செல்லவேண்டி இருந்தது. பஸ்ஸில் போவதை விட தடதடக்கும் சப்தத்தை இரசித்துக் கொண்டு இரயில் வண்டியில் சென்றுவிடலாம...
Continue reading
பின்னூட்டங்கள்